சச்சினுக்கு விரைவில் பாரத் ரத்னா!
உலகின் முதல் நிலை கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கருக்கு இந்திய அரசு பாரத் ரத்னா விருதை வழங்கவிருக்கிறது.
இதுகுறித்த ஆலோசனை நடந்து வருவதாகவும், உரிய நேரத்தில் சச்சின் பாரத் ரத்னா விருதுடன் கௌரவிக்கப்படுவார் என்றும் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
20 ஆண்டுகளாக கிரிக்கெட் ஆடிவரும் சச்சின் டெண்டுல்கள், தொடர்ந்து சாதனை மேல் சாதனை படைத்து வருகிறார்.
டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் இவரது சாதனைகளை யாராலும் அத்தனை சுலபத்தில் முறியடிக்க முடியாது என்ற நிலை தோன்றியுள்ளது.
சமீபத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 200 ரன்களை அவுட்டின்றி குவித்து உலகை வியக்கச் செய்தார்.
இதைத் தொடர்ந்து சச்சினுக்கு உலக அளவில் பாராட்டுக்கள் குவிகின்றன. சச்சின் இந்தியாவின் பெருமையை உலக விளையாட்டரங்கில் பட்டொளி வீசிப் பறக்கச் செய்துவிட்டதா பிரதமர் மன்மோகன்சிங் கூறியிருந்தார்.
பிரபல கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் சச்சின்தான் இந்திய கிரிக்கெட்டின் இணையற்ற வீரர் என்று பாராட்டியுள்ளனர்.
இன்னொரு பக்கம், தேசத்தின் மதிப்பு மிக்க ஒரு குடிமகனை உயர்ந்த விருதான பாரத் ரத்னா கொடுத்து கவுரவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் தீவிரமாக எழுந்துள்ளன.
மும்பையில் வசிப்பது தொடர்பாக சச்சினின் கருத்துக்களுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவரும் சிவசேனா காட்சி, சச்சினுக்கு உடனடியாக பாரத் ரத்னா வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தது.
கட்சி பேதமின்றி இப்போது அனைத்து தலைவர்களுமே சச்சினுக்கு பாரத் ரத்னா வழங்க வலியுறுத்தி வருகின்றனர். பொதுமக்கள், கிரிக்கெட் ரசிகர்கள், சச்சினின் வெறித்தனமான ரசிகர்கள் என அனைவருமே இந்த விஷயத்தில் ஒரே குரலை எதிரொலிக்கிறார்கள்.
இதைத் தொடர்ந்து, சச்சின் டெண்டுல்கருக்கு பாரத் ரத்னா தருவது பற்றிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது இந்திய அரசு.
பாராளுமன்றத்திலும் நேற்று இந்த கோரிக்கை முன் வைக்கப்பட்டது. சச்சினுக்கு பாரத் ரத்னா பற்றி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என அப்போது அரசு தரப்பில் கூறப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறுகையில், சச்சினுக்கு மிக உயர்ந்த மரியாதையை பாரத் ரத்னா போன்ற விருதினை உரிய நேரத்தில் மத்திய அரசு வழங்கும் என்றார்.
அட்வான்ஸ் வாழ்த்துக்கள் சச்சின்!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment