என் அன்பு தோழர்களுக்கு ...
நான் படித்ததில் பிடித்த ஓர் காதல் கவிதை
ஒரு தலை காதல் ...
------------------------------------------------------------------------------------
காதோரம் களைந்து நிற்கும்,
கார்கூந்தல் சொல்லுமடி,
எந்தன் காதலை சொல்லிட,
எடுத்த முயற்சி எத்தனை என்பதை..!
தோளில் சாய்ந்து,
தோழன் என்றாய்;
இடதுபக்க என்னிதயம் சொல்லவில்லையோ..?
இவன் துடிப்பது உனக்காக என்று..
மண்ணில் வேரூன்றி,
விண்ணில் விழியூன்றி,
புற்களாய் காத்திருந்தேன்-காதலி நீ,
பனித்துளியாய் வீழ்ந்திடுவாய்;-என் மீது,
சில மணித்துளியாவது வாழ்ந்திடுவாய் என்று...
தொழில்நுட்பம் அத்தனைக்கும்,
நன்றி சொல்ல அட்டவணையிட்டேன்;
தொலைபேசியில் உன்குரல் கேட்ட பின்பு;
கணிணியில் உன்முகம் பார்த்த பின்பு...
கொலைகாரனாகிடுவேன்,
கொசு கடித்தால் கூட-இருந்தும்,
சிலையானேன்,
உன்வீட்டு நாய் கடித்தும்;
நல்லவளே நீ என்னை,
நலம் விசாரித்திட வருவாயென்று...
என் பெயரை எழுதிடசொல்லி,
எழுதுகோலை கையில் கொடுத்தேன்;
ஏதோ கிருக்கியபடி,
எங்கேயோ சென்றிட்டாய்...
அப்போது புரிந்திடவில்லை,
அன்பே உன் கிறுக்கல்கள்;
இப்போது இனம் கண்டேன்,
இவன் ஒரு கிருக்கனென்று...
அழகான உன்னுருவம் கண்டு,
ஆச்சரியப்பட்டதோ ஆகாயச்சூரியனும்?..!
உன் நிஜம் கொண்டு,நகல் எடுத்து,
நிழல் என்று பெயரிட்டதோ?
நிஜம் எது? நிழல் எது?
அந்த அடையாளம் கண்டுகொள்ள,
நிறம்கொடுக்க மறுத்ததோ?
நிழலுக்கு மட்டும்.....
இலக்கண இலக்கியங்கள்,
இன்று பயின்றேன்;
இனியவளே! உனக்காக,
இதுவரை இல்லாத,
இதிகாசமொன்று எழுதிட,
கவிதையென்றால் என்னவென்று,
கேள்விக்கணை தொடுத்த காலமொன்று..
காதல் என்னில் விதைந்த பின்னே,
'கவிஞன்' என்ற வார்த்தை,
என் பெயருக்கு முன்னே...!
அலையாய் வந்திட்டேன்;
சிலையே உன்னிடம்;
என் காதலை சொல்லிட..
யாரோ ஒருவரின்,
திருமதியாகிட,
திருமண ஓலையுடன்,
திசையொன்றில் நீ நிற்க;
நுரையாய் கரைந்தேனடி;
நூறு முறை அழுதேனடி...
மனதில் விதைந்த காதல்,
மண்ணில் புதைந்து போனதென்ன??
சொல்ல வந்த காதலை,
சோகம் வந்து சூழ்ந்ததென்ன??
மேகம் ஒன்று கூடாமல்,
காதல் போட்ட கோலத்தை,
பருவமழை தொடர்ந்து வந்து,
பக்குவமாய் அழித்ததென்ன??
திறக்கப்படாத புத்தகமாய்--என் காதல்,
எரிக்கப்பட்ட நோக்கமென்ன??
அரங்கேறாத நாடகமாய்,
அவைகளைந்த அவசரமென்ன???
ஆயிரம்பேர் ஆறுதல் சொல்ல,
ஆத்திரத்தில் மது அருந்த,
பெற்றவள் கொடுத்திட்ட உயிரைக்கூட,
பெட்ரோலால் எரித்திட நினைத்தேனடி;
அடியே உன்னை,
அடியோடு மறந்திட…
உயிர் கொடுத்திட்ட,
உன் அன்னைக்கு மட்டும்,
மகராசி பட்டம் கொடுத்திட்டாய்...
உனக்காக உயிர்உதிர்த்திட,
உரிமையோடு உயிர் வாழ்ந்திடும்,
எனக்கு மட்டும்,
ஏன் இந்த பரதேசி பட்டம்...?
நாட்கள் நகர்ந்திட,
நானும் மறந்திட,
நிரந்தரமாய் அல்ல;
அவ்வப்போது உன் நினைவுகளுடன்...
கணமான என் காதல் நினைவுகளை,
காலம் கடந்து யோசித்தேன்...
காவியமாய் எழுதிட எண்ணி,
கண்ணீரால் கவி பாடினேன்..
முன்னுரையில்லாது முடிவுரையான,
என் காதலுக்கு,
நீ வைத்திட்ட முற்றுப்புள்ளியையே,
என் கவிதைக்கும் முற்றுப்புள்ளியாக்கி,
முறைத்துப்பார்த்து வெறுக்கிறேன்;
முதன்முறையாக முற்றுப்புள்ளியை.......
Subscribe to:
Post Comments (Atom)

Author...?
ReplyDelete